சீனாவில் பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிய கோர விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு…!!
கிழக்கு சீனாவில் பாரம் ஏற்றிவந்த ஒரு டிராக்டர் அடுத்தடுத்து இரு பஸ்கள், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றின்மீது மோதிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷங்டாங் மாகாணத்தின் முக்கிய நகரான ஜிபோ பகுதியில் கடந்த வியாழக்கிழமை பாரம் ஏற்றிவந்த ஒரு டிராக்டர் வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து இரு பஸ்கள், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றின்மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக சீன ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவத்தில் காயமடைந்த 20-க்கும் அதிகமானோர் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் அந்த செய்திகள் தெரிவித்துள்ளன.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating