பாகிஸ்தானில் பெண் வயிற்றில் இருந்து ஹேர்பின், கண்ணாடி துண்டுகள் உள்ளிட்ட 22 பொருட்கள் அகற்றம்…!!
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 22 வயதுமிக்க இளம் பெண் ஒருவருக்கு நேற்று அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற்றது.
அந்த பெண்மணி கடுமையாக வயிற்று வலி காரணமாக சென்ற வாரம் குர்ராம் பழங்குடியின மாவட்டத்தில் இருந்து சிகிச்சைக்காக வந்திருந்தாள். மேலும் அந்த பெண் மனநலம் குற்றியவளாக இருந்தாள்.
பின்னர் அந்த பெண்ணுக்கு எக்ஸ்-ரே எடுத்து பார்த்ததில் வயிற்றுக்குள் பல்வேறு பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து ஹேர்பின், பெரிய நகங்கள், கண்ணாடி துண்டுகள் உள்ளிட்ட 20 பொருட்கள் மருத்துவர்களால் நேற்று அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
சுமார் 4 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும், தற்போது அந்த பெண்மணி உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating