சென்னையில் ஏ.டி.எம். மையத்திற்கு சென்ற வேன் பணத்துடன் கடத்தல்: ரூ.15 லட்சம் கொள்ளை போனதாக தகவல்…!!
சென்னையில் இன்று மாலை ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்புவதற்காக வேனில் பணம் கொண்டு செல்லப்பட்டது. வடக்கு கடற்கரை காவல் நிலையம் அருகே சென்றபோது வேனை மர்ம நபர்கள் வழி மறித்தனர். பின்னர் வேனில் பாதுகாப்புக்கு சென்ற காவலாளியை தாக்கிவிட்டு பணத்துடன் வேனைக் கடத்திச் சென்று விட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், கடத்தப்பட்ட வேனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ராயபுரம் அருகே அந்த வேன் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அதில் பணம் இல்லை. பணத்தை கொள்ளையடித்துவிட்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளை போன வங்கிப் பணம் எவ்வளவு? என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. ஆனால், வேனில் ரூ.15 லட்சம் இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கொள்ளையர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சேலத்தில் இருந்து சென்னை வந்த ரெயிலின் மேற்கூரையை துளையிட்டு வங்கிப் பணம் ரூ.6 கோடியை கொள்ளையடித்த கொள்ளையர்கள் இதுவரை சிக்காத நிலையில், சென்னையில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் காவல்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating