வாழைச்சேனையில் பிள்ளைகள் காணாமல் போனமையினால் பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை..!! (வீடியோ)
கல்குடா கடலிலில் குளிக்கச்சென்ற தமது பிள்ளைகள் கடல் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு, காணாமல்போயுள்ளதாக தகவல் அறிந்த தாய் மற்றும் தந்தை தற்கொலை செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கல்குடா பட்டியடிச்சேனை கிராமத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பட்டியடிச்சேனை கல்குடாவினைச் சேர்ந்த சண்முகம் மற்றும் அவரது மனைவி யோகேஸ்வரி சண்முகம் ஆகியோர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நேற்று கடலில் நீராடச்சென்ற பட்டியடிச்சேனை கல்குடாவினைச் சேர்ந்த சண்முகம் சதீஸ்குமார் என்ற 20 வயதுடைய மற்றும் அவரது சகோதரர் சண்முகம் சுரேஸ் என்ற 18 வயதுடைய இளைஞர்கள் கடலில் குளிக்கச் சென்ற போது காணமல்போயிருந்தனர்.
இதுவரை காணாமல் போன இரு சகோதரர்களது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை மேலும் இருவர் காப்பற்றப்பட்டவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலும் பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating