வாகன விபத்தில் இருவர் படுகாயம்…!!
கல்முனை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கல்முனை பெரிய நீலாவணையின் பிரதான வீதியில் இன்று (01) மாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் வண்டியுடன் சைக்கிள் மோதியதால் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சைக்கிளில் பயணித்த பெரிய நீலாவணைக் கிராமத்தை சேர்ந்த ச.விஜயரெத்தினம் (வயது65) கல்முனை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாகவும், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் பெரியகல்லாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெல்லாவெளிப் பொலிஸார் கூறியுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating