அன்னை இல்லத்தில் விஜய்-செல்வராகவன் சந்திப்பு?
செல்வராகவன் இயக்கத்தில் தற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் உருவாகியுள்ளது. எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், விஜய்யை வைத்து செல்வராகவன் ஒரு படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளிவந்தது.
இவர்கள் இணையும் படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து எந்தவொரு செய்தியும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், செல்வராகன் சமீபத்தில் பிரபுவின் அன்னை இல்லத்திற்கு வருகை தந்த விஜய்யை நேரில் சந்தித்தாராம்.
அப்போது விஜய்யிடம் செல்வராகவன் தனது கதையை அவரிடம் விளக்கி கூறினாராம். செல்வராகவன் கூறிய கதை விஜய்க்கு ரொம்பவும் பிடித்துப்போய் விட்டதாம். மேலும், கதையில் ஒரு சில இடங்களில் மட்டும் மாற்றங்கள் செய்யச் சொல்லியிருக்கிறாராம்.
எனினும், இவர்கள் இணையும் படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தற்போது நடித்து வரும் ‘பைரவா’ படத்திற்கு பிறகு, அட்லி இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த இரு படங்களும் முடிந்தபிறகு செல்வராகவனுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Average Rating