புதிய அரசியலமைப்பு சகல இனங்களுக்கும் பாதுகாப்பளிக்கும் : கிரியெல்ல திட்டவட்டம்…!!
Read Time:1 Minute, 13 Second
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் உருவாக்கப்பட்டுவருகின்ற புதிய அரசியலமைப்பானது சகல இன மக்களுக்கும் பாதுகாப்பளிக்கும் வகையிலேயே அமையுமென பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
எமது நாட்டின் பல்லின மக்கள் வாழ்கின்ற நிலையில் ஒருசாராரை மாத்திரம் கவனத்திற்கொண்டு செயற்பாட்டதாலேயே நாம் முப்பது வருட யுத்திற்கு முகம்கொடுக்க நேரிட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை முஸ்லிம் மாணவர்கள் சங்கத்தின் விருது வழங்கல் விழா இன்று சனிக்கிழமை விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Average Rating