உத்தரப்பிரதேசத்தில் பரவிவரும் மர்ம காய்ச்சலுக்கு 4 பேர் பலி…!!
Read Time:1 Minute, 0 Second
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர்நகர் மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 500 பேரில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள முசாபர்நகர் மாவட்டத்தில் இனம்காண இயலாத மர்ம காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது.
இம்மாவட்டத்தில் உள்ள சுமார் 500 பேர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இங்குள்ள ஃபுலட் கிராமத்தை சேர்ந்த பர்ஹா(18), அப்துல் வஹாப்(50), ராம்வதி(65) மற்றும் மங்கே(70) ஆகியோர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Average Rating