இராணுவ சிப்பாய் ஓட்டிய வாகனத்தில் மோதி ஒருவர் பலி: நான்கு பேர் படுகாயம்…!!
Read Time:1 Minute, 20 Second
இராணுவச் சிப்பாய் ஓட்டிச் சென்ற கார் மோதியமையால் ஏற்படுத்திய மூன்று விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சிப்பாய் மதுபோதையில், குருணாகல் நகரில் இருந்து காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
அதிகமாக மது அருந்திய நிலையில் சிப்பாய் காரை ஒட்டிச் சென்றுள்ளதுடன் குருணாகல் வைத்தியசாலைக்கு அருகில் ஏற்படுத்திய விபத்தில் 71 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.
மேலும், குருணாகல் நாரம்பல பிரதேசத்தை சேர்ந்த இந்த இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சந்தேக நபர் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் உள்ள இராணுவ அலுவலகத்தில் சேவையாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating