நண்பரின் மர்ம உறுப்பை வெட்டி வீசிய நபர்: வியப்பூட்டும் காரணம்…!!
ஜேர்மனியில் நபர் ஒருவர் மது போதையில் நண்பரை கொலை செய்து விட்டு அவரது மர்ம உறுப்பினை வெட்டி வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் Hesse பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் குறிப்பிட்ட நபருக்கு 7 ஆண்டுகள் கடும் காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவத்தன்று 32 வயதான நபர் ஒருவர் தனது 53 வயது நண்பருடன் இணைந்து அளவுக்கு அதிகமாக மது அருந்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் மது போதை தலைக்கேறியதும் செய்வது அறியாமல் அந்த 53 வயது நபர் தனது நண்பரை தாக்க துவங்கியுள்ளார்.
மட்டுமின்றி அவரது மர்ம உறுப்பை குறிவைத்து தாக்கத்துவங்கியுள்ளார். இதில் பொறுக்க முடியாத வலியில் அந்த நபர் இவரது முகத்தில் ஓங்கி குத்து விட துவங்கியுள்ளார்.
தாக்குதலில் ஏற்பட்ட அந்த நபர் கீழே விழும் வரைக்கும் இவர் முகத்தில் ஓங்கி குத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முகத்தில் குத்துவாங்கி கீழே விழுந்த நபர் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். இதனிடையே அந்த திடீரென்று இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இவரது நண்பருக்கு இன்னமும் ஆத்திரம் அடங்கவில்லை. அவர் தாம் கருதி இருந்த கத்தியை உருவி இறந்து கிடந்த அந்த 53 வயது முதியவரின் பிறப்புறுப்பை வெட்டி வீசியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு விசாரணையும் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று Hesse நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குறித்த சம்பவம் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி, இறந்த நபரின் மர்ம உறுப்பினை வெட்டி வீசியதன் காரணம் குறித்தும் ஆராய்ந்தார். அதில் தமது அடையாளத்தை விட்டுச் செல்லவே அவரது உறுப்பை வெட்டி வீசியதாக அந்த நபர் பதில் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி குறித்த நபருக்கு 17 மாதங்கள் மட்டும் சிறை தண்டனை விதித்த நீதிபதி 6.5 ஆண்டுகள் புனர்வாழ்வு மையத்தில் தொடர வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
Average Rating