நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு: இருவர் படுகாயம்…!!
Read Time:58 Second
திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் வான் ஒன்றின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நேற்று இரவு நீதிமன்ற வளாக பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையைச்சேர்ந்த இருவரே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
எனினும் குறித்த துப்பாக்கி பிரயோகம் எதற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.
Average Rating