நெல்லையில் மாயமான ஆசிரியை காதலனுடன் போலீசில் தஞ்சம்…!!

Read Time:1 Minute, 41 Second

201610151809052188_hide-teacher-boyfriend-to-the-police-refuge-tirunelveli_secvpfநெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டலை சேர்ந்தவர் அந்தோணி. இவர் மும்பையில் இட்லி கடை வைத்துள்ளார். இவரது மகன் ஆல்பர்ட். நெல்லை மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்தவர் கந்தன் மகள் சரண்யா. இவர் பி.எட். படித்துள்ளார். ஆல்பர்ட் நெல்லையில் படிக்கும்போது அவருக்கும், சரண்யாவுக்கும் இடையே காதல் உண்டானது.

கடந்த 7 வருடமாக அவர்கள் காதலித்து வந்தனர். இருவரும் வேறு வேறு பிரிவினர் என்றதால் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல்ஜோடி ஊரைவிட்டு மும்பை சென்ற அவர்கள் கடந்த 10-ந்தேதி பதிவு திருமணம் செய்தனர். இதனிடையே சரண்யாவை காணவில்லை என்று அவரது தந்தை கந்தன் தச்சநல்லூர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து சரண்யாவை தேடி வந்தார்கள். இந்த நிலையில் மும்பையில் இருந்த காதல் ஜோடி ஆல்பர்ட், சரண்யா நேற்று தச்சநல்லூர் போலீசில் தஞ்சம் அடைந்தனர். அவர்களுக்கு ஆதரவாக வக்கீல் சந்தனகுமார் உடன் வந்தார். இதையடுத்து போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேசி சமரசம் செய்தனர். இதன்பிறகு காதல் ஜோடி புறப்பட்டு சென்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் தலை ஒட்டி பிறந்த குழந்தைகள் தனித்தனியாக பிரிப்பு….!!
Next post கெங்கவல்லி அருகே பாலியல் தொந்தரவால் இளம்பெண் தற்கொலை: வாலிபர் கைது…!!