கண்டி மாவட்ட புறநகர்ப் பகுதியில் தொடரும் புகை மண்டலம்!! அச்சத்தில் உறையும் மக்கள்…!!
Read Time:1 Minute, 15 Second
கண்டி தெல்தோட்டை போபிட்டிய பகுதியில் உள்ள நீரேந்து பிரதேசத்தில் நிலத்தடியில் இருந்து புகை வருவதினால் அப்பிரதேச மக்கள் மத்தியில் அச்ச உணர்வினை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த இடத்தில் கடந்த சில 10 நாட்களாக நிலத்திற்கு கீழ் பகுதியில் இருந்து இவ்வாறு புகை வந்த வண்ணம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதனை பார்வையிடுவதற்காக சம்பவ இடத்திற்கு பல இடங்களில் இருந்து அலைபோல் மக்கள் திரண்டு வருகின்றதாக கூறப்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறு புகை வர கரணம் என்ன என்று தெரியாத நிலையில் மக்கள் இது எரிமலையாக இருக்கக்கூடும் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இருப்பினும் குறித்த பகுதியில் புகை வருவதற்கான காரணத்தினை இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating