ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பாணியில் நண்பனை கொலை செய்த இலங்கையர்…!!
நண்பர் ஒருவர் தனது நண்பனின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் ஒன்று கேகாலை பிரதேசத்தில் நடந்துள்ளது.
கேகாலை ஹெட்டிமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான நபரே இவ்வாறு நண்பனால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்ட நபர், கொலை செய்த நபருக்கு இரண்டு லட்சம் ரூபாவை கடனாக வழங்கியுள்ளார். பெற்றுக்கொண்ட கடனை அவர் திரும்ப செலுத்த தவறியுள்ளார்.
எவ்வாறாயினும் பெற்றுக்கொண்ட கடனில் ஒரு பகுதியை கடந்த 21 ஆம் திகதி மதியம் வழங்க இணங்கியுள்ளார்.
கடன் வழங்கிய நபர் தனது மனைவியுடன் கேகாலை எபலாவ பிரதேசத்திற்கு பணத்தை பெற்றுக்கொள்ள சென்றுள்ளார்.
கடனை பெற்றுக்கொண்ட நபர் மேலும் ஆறு பேருடன் அந்த இடத்திற்கு வந்துள்ளதுடன் வாயு துப்பாக்கி மூலம் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
இதன் போது கடன் வழங்கிய நபரின் மனைவி அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து கடனை பெற்ற நபர், கடன் கொடுத்த தனது நண்பனின் கழுத்தை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பிரேதப் பரிசோதனைகள் கேகாலை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மேற்கொண்டார்.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்ய கேகாலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Average Rating