போலியான கடவுச் சீட்டுடன் ஈரான் பிரஜை கைது…!!
Read Time:1 Minute, 14 Second
போலியான கடவுச் சீட்டுடன் ஈரானிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று(06) கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அதிகாலை வந்திறங்கிய இந்த நபரை விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஈரானிய பிரஜையிடம் இருந்த பிரான்ஸ் நாட்டு கடவுச்சீட்டையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர் துருக்கியில் இருந்து இலங்கை வந்துள்ளதாக அவரிடம் நடத்திய விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இலங்கையில் இருந்து ஜேர்மனியின் பிராங்பேர்ட் சென்று அங்கிருந்து பிரித்தானியாவுக்கு செல்வதற்கு இந்த ஈரானிய பிரஜை திட்டமிட்டிருந்தமை விசாரணையின் போது தெரிய வந்ததாக குடிவரவு-குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.
Average Rating