நிர்வாண தண்டனை – பலாத்கார சோதனையை கடந்து இன்று புரட்சிப் படைத்துள்ள பெண்..!! (படங்கள்)
பாகிஸ்தானை சேர்ந்தவர் முக்தார் மாய். 2002-ஆம் ஆண்டு, தன் சகோதரன் மற்றும் தன் சமூகத்தை தரக்குறைவாகப் பேசியதாக முக்தார் மாய் உள்ளூர் பஞ்சாயத்தில் உள்ள பெரியவர்கள், முக்தரை பலாத்காரம் செய்யச் சொல்லியும், பொதுமக்கள் முன் நிர்வாணமாக நிற்கவைத்தும் தண்டனை விதித்தனர்.
இது நடந்த பிறகு முக்தர் மனம் தளராமல் தன்னை பலத்காரம் செய்த 14 பேர் மற்றும் தண்டனை வழங்கிய ஊர் பெரியவர்கள் மீது, சட்டப் போராட்டம் நடத்தினார். அதில் 6 பேருக்கு மரணதண்டனை பெற்றுத் தந்தார். ஆனால் அவர்கள் அனைவரும் மேல்முறையீட்டில் விடுவிக்கப்பட்டனர்.
தீர்ப்பு வந்த சில நாட்களில், முக்தார் மாய், பெண்களின் உரிமைகளுக்கான போராட்டக் களத்துக்கு வந்தார். மேலும், தன் சொந்த ஊரான மீர்வாலாவில் ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி, கஷ்டத்தில் இருக்கும் பெண்களுக்கு ஆதரவு தந்து உதவிவருவதோடு, குழந்தைகளுக்குக் படிப்பும் சொல்லித்தருகிறார்.
இவருடைய போராட்ட குணம், சேவை மனப்பான்மையை கவனித்த பாகிஸ்தான் பேஷன் டிசைனர் ரோஜினா முனிப், தன் பேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முக்தாருக்கு அழைப்புவிடுத்தார்.
தற்போது 44 வயதாகும் முக்தார் மாய், பேஷன் ஷோ மேடையில் கம்பீரமாக நடந்துவந்து நின்று, ”என்னைப் போல பாதிக்கப்பட்ட பெண்கள், மன உறுதியோடு இருக்கவேண்டும். பெண்கள் கோழைகள் அல்ல என்பதை வாழ்ந்துகாட்டும் உதாரண பெண்ணாக;நான் இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பேஷன் நிகழ்ச்சியியில் கலந்துகொண்டேன்” என்றபோது, அந்த அரங்கம் இன்னும் அழகானது.என்று கூறினார்.
Average Rating