மாத்தறையில் மூன்று கால்களுடன் ஆற்றில் இருந்து வெளியே வந்த இராட்சத விலங்கு..!!
Read Time:1 Minute, 14 Second
நிலவும் கடும் மழையுடன் நில்வாள கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக ஆற்றில் இருந்த முதலையொன்று மாத்தறை -வேலேகொட பிரதேசத்தில் கரைக்கு வந்துள்ளது.
இன்று காலை கண்டுபிடிக்கப்பட்ட இந்த முதலை 18 அடி நீளம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலங்கிற்கு 3 கால்கள் மாத்திரம்;உள்ளமை விஷேட அம்சம் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிறப்பில் இருந்தே இவ்வாறு;கால்கள் இருந்திருக்காலம் என அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளன.
பிரதேசவாசிகள், காவற்துறை அதிகாரிகள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து அந்த முதலையை மீண்டும் நில்வளா கங்கைக்கு விடுவித்துள்ளனர்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட முதலைகளில்;மிகப் பெரிய முதலை இதுவென வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating