அந்தரங்க உரையாடல்கள் தெரிந்துவிட்டதால் அவமானப்பட்டேன்: அதிர வைக்கும் இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்…!!
தமிழகத்தின் திருப்பத்தூர் அருகே கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் தமிழரசன் என்ற நபர் , தனது குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இக்கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட இவர் பொலிசில் அளித்துள்ள அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் இதோ, தன் காதலை அவமானப்படுத்தியதால் தாய், தந்தை, தங்கை ஆகியோரை குத்தி கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும் தான் ஒசூரில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அப்பெண்ணுக்கு ஆடம்பரமாக செலவு செய்தேன். தான் காதலியுடன் பேசிய அனைத்தையும் என்னுடைய போனில் பதிவு செய்து வைத்திருந்தேன்.
இதை என் தங்கை எப்படியோ அறிந்து கொண்டு, போனில் இருந்த உரையாடல்கள் அனைத்தையும் பெற்றோரிடம் காண்பித்து விட்டாள். என்னுடைய அந்தரங்க உரையாடல்கள் அனைத்தையும் பொற்றோர்கள் அறிந்து கொண்டதால் மிகவும் அவமானத்திற்கு உள்ளானேன்.
அதுமட்டுமின்றி தனக்கு மிகப் பெரிய வேலை ஒன்று கிடைத்ததாகவும், அதற்கு வீட்டில் 20,000 ரூபாய் கேட்ட போது, தன் காதல் விவாகரங்களை கூறி தன்னை உதாசீனப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். அவர்கள் தன்னுடைய காதலையும் ஏற்க மறுத்தனர். அனுதினமும் இதனை கூறியே என்னை வெறுப்பேற்றினர்.
தொடர்ந்து என் வீட்டில் நடைபெற்று வந்த பிரச்சனைகளால் மிகுந்த ஆத்திரத்திற்கு ஆளான நான், இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முடிவுசெய்தேன்.
அதன் படி சம்பவதினத்தன்றும் காலையில் என் தங்கை மற்றும் தாயை குத்தி கொலை செய்துவிட்டு இரவில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய என் தந்தையையும் கொலை செய்தேன் என கூறியுள்ளார்.
Average Rating