மேற்குவங்கம்: பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…!!
Read Time:57 Second
மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஹவுராவில் உள்ள நித்யதன் முகர்ஜி சாலையில் இந்த தொழிற்சாலை உள்ளது.
தீ விபத்து நடந்த இடத்திற்கு 15 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து சென்றுள்ளன. நேற்று இரவு 10 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.
தீயை அணைக்கு பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. பாதிப்புகள், உயிரிழப்பு குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
Average Rating