காதல் எதிர்ப்பு விவகாரத்தில் வாலிபர் பலி..!!
Read Time:1 Minute, 10 Second
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே உள்ள சாப்டூரைச் சேர்ந்தவர் குப்பையாண்டி. இவரது மகன் முருகன் (வயது 28). கூலித்தொழிலாளி.
இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த பெண்ணை திருமணம் செய்ய, முருகனின் பெற்றோரும், காதலியின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி முருகன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பேரையூர் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating