வாகனத்தின் அடியிலிருந்து மலைப்பாம்பை இழுத்தெடுத்த சிறுவன்..!! (வீடியோ)
Read Time:1 Minute, 21 Second
செவன்டீன் செவன்ட்டி” எனும் நகரைச் சேர்ந்த ஒலி வார்ட்ரோப் எனும் சிறுவனே இவ்வாறு துணிச்சலுடன், வாகனத்திலிருந்து பாம்பை அகற்றியுள்ளான்.
இச் சிறுவன் சிறு வயதிலிருந்தே பாம்புப் பிடிப்பதில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில், செவன்டீன் செவன்டி நகரில் லான்ட்ஸ் குரூஸர் ரக வாகனமொன்றில் அடியில் பாம்பொன்று கிடப்பதாக தகவல் கிடைத்தவுடன் இச் சிறுவன் வாகனத்தின் அடியில் மல்லாக்காகக் கிடந்தவாறு பாம்பை இழுத்தெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டான்.
இதன்போது பிடிக்கப்பட்ட வீடியோவொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. காலை வேளையில், ஒலி வார்ட்ரோப் பாடசாலைக்கு செல்வதற்கு சற்று முன்பாக இப் பாம்பு அகற்றும் நடவடிக்கையில் அவன் ஈடுபட்டதாக அவனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Average Rating