இந்தி நடிகை ராக்கி சாவந்துக்கு கைது வாரண்டு..!!
Read Time:1 Minute, 6 Second
பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த் கடந்த ஆண்டு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் குறித்து ஒரு அவதூறான கருத்தை தெரிவித்தார். சமுதாய உணர்வுகளை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி அவர் மீது பஞ்சாப் மாநிலம் லூதியானா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகும்படி பலமுறை கோர்ட்டு உத்தரவிட்டும் அவர் ஆஜராகவில்லை. இறுதியாக கடந்த மாதம் 9-ந்தேதியும் அவர் ஆஜராகவில்லை. இந்த வழக்கு 9-ந்தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் நடிகை ராக்கி சாவந்துக்கு கோர்ட்டு கைது வாரண்டு பிறப்பித்தது. 2 போலீசார் அந்த வாரண்டுடன் மும்பைக்கு சென்றுள்ளனர்.
Average Rating