திருமண நாளில் மற்றொரு பெண்ணை கற்பழித்த மணமகன்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!
பிரித்தானிய நாட்டில் திருமண நாளில் சாலையில் சென்ற இளம்பெண் ஒருவரை கற்பழித்த மணமகனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்து தலைநகரான லண்டனில் Derry McCann(28) என்ற நபர் வசித்து வந்துள்ளார்.
கடந்த 2006-ம் ஆண்டு கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் சிறை தண்டனைக்கு பின்னர் சமீபத்தில் விடுதலை ஆகியுள்ளார்.
நபர் விடுதலை ஆனதும் அவரது முன்னாள் காதலிக்கும் அவருக்கு திருமண ஏற்பாடு நிகழ்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 13-ம் திகதி இருவருக்கும் திருமணம் நடத்துவதாக உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், திருமணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் மணமகன் வெளியே சென்றுள்ளார்.
அப்போது, சாலையில் 24 வயதான இளம்பெண் வருவதை பார்த்த மணமகன் அவரை மிரட்டி அருகில் உள்ள விக்டோரியா பூங்காவிற்கு இழுத்துச்சென்றுள்ளார்.
பின்னர், பெண்ணை மிரட்டிய மணமகன் அவரை மூன்று முறை கொடூரமாக கற்பழித்துவிட்டு அவருடைய செல்போனையும் திருடிக்கொண்டு தப்பியுள்ளார்.
இச்சம்பவத்திற்கு பின்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. எனினும், இவ்விவகாரம் வெளியானதை தொடர்ந்து நபரை பொலிசார் கைது செய்தனர்.
ஏற்கனவே கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பின்னரும் தற்போது மீண்டும் அதே குற்றத்தில் ஈடுப்பட்டதால் அவருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இவ்வழக்கின் இறுதி விசாரணை சமீபத்தில் நீதிமன்றத்திற்கு வந்தபோது குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், அடுத்துள்ள 9 ஆண்டுகளுக்கு நபரை பரோலில் கூட வெளியே செல்ல அனுமதிக்கூடாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Average Rating