கடலாடி அருகே திருமணமான மறுநாளில் புதுப்பெண் தற்கொலை..!!
கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் முடிதேவர். இவரது மகள் முருகேஸ்வரி (வயது 21). இவருக்கும் பெரிய குளம் கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கம் மகன் சரவணன் (32) என்பவருக்கும் 2 நாட்களுக்கு முன்பு (4-ந் தேதி) விமரிசையாக திருமணம் நடைபெற்றது.
நேற்று மாமனார் வீட்டில் விருந்தை முடித்து விட்டு சரவணன், மனைவியை விட்டு விட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டார். மாலையில் வீட்டில் தனியாக இருந்த முருகேஸ்வரி திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவர் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோரும் உறவினர்களும் கதறிஅழுதது பரிதாபமாக இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த முதுகுளத்தூர் போலீஸ் டி.எஸ்.பி. ரவி, கடலாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சத்யா மற்றும் போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து முருகேஸ்வரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். பரமக்குடி ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெற உள்ளது.
திருமணம் ஆன மறுநாளே புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating