வலியால் துடித்த பெண்.. காதுக்குள் குடியிருந்த சிலந்தி.. அதிர்ச்சியில் மருத்துவர்கள்..!! (வீடியோ)
Read Time:1 Minute, 15 Second
கர்நாடக மாநிலத்தில் பெண் ஒருவர் தாங்கமுடியாத தலைவலியாலும், காதுகளில் ஏதோ அசௌகர்யம் காரணமாக அவதிப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அந்த பெண்ணை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.
அப்போது அந்த பெண்ணின் காதிற்குள் ஒரு சிலந்தி இருப்பதைக் கண்ட மருத்துவர்கள் அதிர்சியடைந்தனர். அதோடு அந்த சிலந்தி உயிருடன் இருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் தெரிவிப்பதாவது, பெங்களூரை சார்ந்த அந்த பெண்ணின் பெயர் லட்சுமி.
சம்பவம் நிகழ்ந்த போது அந்த பெண் வீட்டில் உள்ள வராண்டாவில் தூங்கி கொண்டு இருக்கிறார். எழுந்தவுடன் மிகுந்த தலை மற்றும் காது வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பிறகு தான் அவர் காதில் சிலந்தி இருந்தது தெரியவந்தது.
Average Rating