பேய் ஆணையிட்டதா? தந்தை மகளுக்கு செய்துள்ள அதிர்ச்சி செயல்..!!
பேய் ஆணையிட்டதாக கூறி தந்தையே மகளின் காதுகளை வெட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் ஜிடிபி நகர் பகுதியில் வசித்து குறித்த நபருக்கு 2 பெண்கள் குழந்தைகள்.
அதில், ஒரு குழந்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் இறந்துவிட்டதால் குடிப்பழகத்திற்கு ஆளாகிய யுள்ளார் தந்தை. சற்று மனநலம் சரியில்லாதவர் போல் நடந்துகொள்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர், தனது 3 வயது பெண் குழந்தையின் காதை வெட்டியுள்ளார்.
இதுதொடர்பாக குறித்த நபரை கைது செய்து, காவற்துறை விசாரணை மேற்கொண்டதில், பேய் ஒன்று தன்னிடம் கூறியதால், குழந்தையின் காதை வெட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இதனை தான் செய்யாவிட்டால் குழந்தை இறந்துவிடும் என பேய் சொன்னதாகவும், இதன் காரணமாகவே இந்த கொடூரச் செயலை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Average Rating