குழந்தையை கொன்று பிளாஸ்டிக் பையில் அடைத்த கொடூரம்..!!
இந்தியாவில் ஒன்றரை வயது குழந்தையை கொன்று பிளாஸ்டிக் பையில் அடைத்து வைத்த உறவுக்காரர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தின் மலாத் பகுதியை சேர்ந்தவர் தர்மேந்திரா கண்டு, இவரும் விக்கி என்பவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
இருவரும் உறவினர்கள் என்பதாலும் தர்மேந்திராவின் ஒன்றரை வயது மகன் விவான் அடிக்கடி விக்கியின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று விக்கியின் வீட்டுக்கு சென்ற விவான் வீடு திரும்பவில்லை.
எங்கு தேடியும் கிடைக்காததால் தர்மேந்திரா பொலிசில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து மோப்ப நாயின் உதவியுடன் விவானை தேடியுள்ளனர், நாய் விக்கியின் வீட்டில் பின்புறத்தில் இருந்த பிளாஸ்டிக் பையை பார்த்து சத்தம் போட்டுள்ளது.
பொலிசார் அதை திறந்து பார்த்த போது குழந்தை விவானின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பொலிசார் நடத்திய விசாரணையில், சொத்து தகராறில் விவானை கொன்று மறைந்து வைத்தது தெரியவந்துள்ளது, உறவினர்களே சிறுவனை கொடூரமாக கொன்ற விடயம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating