கள்ளக்குறிச்சி அருகே பிளஸ்-2 மாணவி கற்பழிப்பு: ஆசிரியருக்கு வலைவீச்சு..!!
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த கல்வராயன்மலை நொச்சிமேடு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டுக்கு வந்தார். விடுமுறை முடிந்த பின்னர் 4-ந் தேதி மீண்டும் பள்ளிக்கு சென்றார். பள்ளி முடிந்ததும் அவர் விடுதிக்கு செல்லாமல் மீண்டும் நொச்சிமேடு கிராமத்தில் உள்ள வீட்டுக்கு பஸ்சில் வந்தார்.
அதே பஸ்சில் கல்வராயன் மலையை சேர்ந்த வாலிபர் ஒருவர் வந்தார். பஸ் நெடுந்துரை என்ற இடத்தில் வந்தபோது மாணவி பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு மலைபாதை வழியாக சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வாலிபரும் பஸ்சில் இருந்து கீழே இறங்கி மாணவியை பின்தொடர்ந்து சென்றார்.
ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சென்றபோது மாணவியை அவர் வழிமறித்தார். அங்குள்ள கரும்பு தோட்டத்துக்கு தூக்கிச்சென்றார். அங்குவைத்து அவரை கற்பழித்துவிட்டு ஓடிவிட்டார். வீட்டுக்கு சென்ற மாணவி இதுகுறித்து தன் தந்தையிடம் கூறினார். இதனைத்தொடர்ந்து மாணவியின் தந்தை கரியாலூர் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் விசாரணை நடத்தினார். அதில் அந்த வாலிபர் மாவட்டிப்பட்டில் உள்ள பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருவது தெரியவந்தது. அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கற்பழிக்கப்பட்ட மாணவி சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிளஸ்-2 மாணவியை ஆசிரியர் கற்பழித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating