மனைவியின் தலையை துண்டாக்கிய கணவன்: அதிர்ச்சி தரும் காரணம்..!!
பாகிஸ்தான் நாட்டில் மனைவி வெளியில் சென்று வேலை பார்ப்பது பிடிக்கார காரணத்தால் கணவர் அவரை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள ஷாம்கே பாட்டியான் பகுதியை சேர்ந்த நஸ்ரின்(37) என்பவர் அருகில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அவர் வெளியில் சென்று வேலை பார்ப்பதை பிடிக்காத அவரது கணவர் அப்ராஹிம் வேலையை விடுமாறு கூறியுள்ளார்.
ஆனால் நஸ்ரின் தொடர்ந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று நஸ்ரின் தூங்கிபின்னர் அவரது தலையை துண்டித்துவிட்டு இரவோடு இரவாக அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அப்பகுதிக்கு விரைந்த பொலிசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், நஸ்ரினை கொன்றது அவரது கணவர் தான் என உறுதியாக தெரியவந்துள்ளது.
மேலும், தப்பியோடி அவரை பொலிசார் தேடி வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளன.
Average Rating