சாலையில் நடந்து சென்ற மூதாட்டியை தாக்கிய பன்றிகள்..!! (வீடியோ)
Read Time:56 Second
ஆந்திர மாநிலத்தின் நெல்லூரில் உள்ள சாலையில் 65 வயதான மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மூதாட்டியை நோக்கி வந்த இரண்டு பன்றிகள் அவரை கடுமையாக தாக்க தொடங்கின.
இதில் நிலைதடுமாறி மூதாட்டி கீழே விழுந்த நிலையில் அவரை எழவிடாமல் பன்றிகள் தாக்குதலை தொடர்ந்தன. இதையடுத்து சாலையில் சென்ற பொதுமக்கள் பன்றிகளை கற்களால் அடித்து விரட்டினார்கள்.
பிறகு மூதாட்டி பன்றிகளிடமிருந்து மீட்கப்பட்ட நிலையில், உடலில் ஏற்பட்ட காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Average Rating