4 மாதங்களாக மகளை உறவினர்களுடன் சேர்ந்து துஷ்பிரயோகம் செய்த தாய்..!!
அமெரிக்காவில் பள்ளி மாணவியை துஷ்பிரயோகம் செய்த வழக்கில் சிறுமியின் தாய் உட்பட நான்கு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.நியூயார்க், ஆல்பியன் பகுதியில் உள்ள வீட்டில் வைத்தே சிறுமி சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியின் தாய் லெஸ்லியான் ரீடர்(34), அவரது காதலன் கரி பாபிஸ்(37), ரீடரின் சகோதரி பிராண்டி (18) மற்றும் பிராண்டியின் கணவர் ஷான் வெய்லி (23) ஆகியோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.இந்த நான்கு பேரும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் சிறுமியை ஆல்பியன் பகுதியில் உள்ள வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து வந்ததாக பொலிசாரால் நம்பப்படுகிறது.
கடந்த வாரம் அங்கிருந்த தப்பித்த சிறுமி அருகில் உள்ள வீட்டிற்கு சென்று நடந்ததை கூறியுள்ளார். இதன் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வர சிறுமியை அடைத்து துஷ்பிரயோகம் செய்து வந்த அவரது தாய் உட்பட நான்கு பேரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.சிறுமிக்கு தினமும் ஒரு வேளை மட்டுமே உணவு கொடுத்து அடித்து துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறுமியின் தாய் மீது குழந்தை துஷ்பிரயோகம் வழக்கு பதியப்பட்டுள்ளது. மற்ற மூன்று பேர் மீது தாக்குதல் வழக்கு பதியப்பட்டுள்ளது.மூன்று குழந்தைகள் வீட்டில் வசித்து வந்த நிலையில், சிறுமி மட்டும் தனிமைபடுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது,பாதிக்கப்பட்ட சிறுமி உட்பட மூன்று குழந்தைகளும் மற்ற உறவினர்கள் வீட்டில் வசித்து வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்
Average Rating