3500 அடி உயரத்தில் குழந்தை பாக்கியத்திற்காக நபர் செய்த காரியம்… கதிகலங்க வைக்கும் சம்பவம்..!! ( வீடியோ)
முசிறியில் மலைமீது சஞ்சீவி பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலை சுற்றிவர வழி ஏதும் இல்லாத நிலையில் பக்தர்கள் ஆபத்து நிறைந்த மிகசிறிய வெளிபுற சுவர் வழியாக கோவிலை சுற்றி வருகின்றனர்.
பக்தர் ஒருவர் கோவிலில் வெளிபுற சுவற்றின் வழியாக கோவிலை எளிதாக சுற்றி வந்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் கோயிலை சுற்றி வரும்போது 3500 அடி பள்ளத்தில் தவறி விழுந்துவிட்டார்.
இது தொடர்பான செல்போன் காட்சிகள் வேகமாக பரவி வருகிறது. இதனையத்து தவறி விழுந்த நபரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனர்.
கோயிலை சுற்றிவரம்போது தவறி விழுந்த நபர் ஆறுமுகம் என்றும் அவர் ஆட்டோ ஓட்டிவந்தார் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.
குழந்தை இல்லாதகாரணத்தால் குழந்தைபாக்கியம் வேண்டி சஞ்சீவி பெருமாள் கோயிலை சுற்றி வரும்போது அவர் தவறி விழுந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Average Rating