விசாரணை என்ற பெயரில் கர்ப்பிணி பெண்ணை கொடுரமாய் சித்தரவதை செய்து கருவை கலைத்த பொலிஸார்!! . (வீடியோ)
அமெரிக்காவில் கொலை முயற்சி குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட கர்ப்பிணி பெண் ஒருவரை பொலிஸார் தாக்கியதால் அவரது கர்ப்பம் கலைந்துள்ளது.
காதலனுடன் ஏற்பட்ட சண்டையால் தனது தற்காப்பிற்காக அவரை கத்தியால் குத்தியுள்ளார் இதனால் வன்முறையில் ஈடுபட்டதாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்போது அந்த பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். சிறியில் இருந்த போது விசாரணை என்ற பெயரில் பொலிஸார் அவரை தாக்கியுள்ளனர்.
தண்ணீரை பாய்ச்சியும் கொடுரமாய் சித்தரவதை செய்துள்ளனர். இதனால் அவரது கரு கலைந்துள்ளது.
இது குறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அந்த பெண் மட்டுமின்றி இது போன்று பல கைதிகள் ஓகியோ சிறையில் கடுமையாக தாக்கப்படுவதாக தெரிகிறது.
மேலும் அமெரிக்காவில் இது போன்று வேறு சில சிறைகளிலும் கைதிகள் கொடுமைபடுத்தப்படுவதால் ஐ . நா சபை இது குறித்த விசாரணையை கையில் எடுத்துள்ளது.
Average Rating