நடிப்புக்கு முழுக்குப் போட்டு திருமதி கோபிகா அஜிலேஷாக திருமண வாழ்க்கைக்கு திரும்புகிறார் கோபிகா
இயக்குனர் சேரனின் ‘ஆட்டோ கிராஃப்’ மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் கோபிகா. தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும்போதே, வீட்டில் இவருக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். அயர்லாந்தில் மருத்துவராக பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த அஜிலேஷ் என்பவரை இணையதளம் மூலம் அஜிலேஷ் என்பவரை இணையதளம் மூலம் கோபிகாவின் பெற்றோர் தேர்வு செய்தனர். இவர்கள் இருவருக்கும் கடந்த மே மாதம் 22-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஜூலை 13-ம் தேதி மணமக்களின் சம்மதம் கேட்கும் நிகழ்ச்சி கோலகலமாக நடந்தது. திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு முழுக்குப் போடுவதால், பல மாதங்களுக்கு முன்பே புதிய படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் கோபிகா. தமிழில் அவர் நடித்து வெளிவந்த கடைசிப் படம், ‘வெள்ளித்திரை’. இன்று எர்ணாகுளம் கோதமங்கலத்தில் உள்ள மார்த்தேமா ஆலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி கோபிகா-அஜிலேஷ் திருமணம் நடைபெறுகிறது.
Average Rating