மசூதிக்கு உரிமை கோரி பாகிஸ்தானில் மோதல்: 17 பேர் சாவு
Read Time:45 Second
வழிபாட்டுத் தலத்திற்கு உரிமைகோரி சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்கள் மோதிக்கொண்டனர். இதில் 17 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் வடகிழக்குப் பகுதியில் உள்ளது ஓரக்ஸôய் பழங்குடியின மாவட்டம். இங்குள்ள புராதன வழிபாட்டுத் தலத்திற்கு உரிமைகோரி சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்கள் சில நாள்களுக்கு முன் மோதிக்கொண்டனர். இந்த மோதலில் 17 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.