மேலாடை அணியாமல் போராட்டம் நடத்த பெண்களுக்கு உரிமை உண்டு
Read Time:1 Minute, 7 Second
அமெரிக்காவைச்சேர்ந்த பெண் எலிசபெத் புக்.இவர் மேலாடை அணியாமல் போராட்டம் நடத்த தடைவிதிக்கும் சட்டத்தை எதிர்த்து 2004ம்ஆண்டு மார்ச் மாதம் போராட்டம் நடத்தினார்.திறந்த மார்புடன் அவர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.அப்போது அவரை போலீசார் கைது செய்தனர்.அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வொலுசியா கவுண்டியில் உள்ள அப்பீல் கோர்ட்டு எலிசபெத் மேலாடை அணியாமல் போராட்டம் நடத்தலாம்என்று தீர்ப்பு கூறியது.
பொதுஇடத்தில் நிர்வாணமாக போராட்டம் நடத்துவதற்கு தடைவிதிக்கும் சட்டம் 2002ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.இந்தசட்டம் பெண்களுக்கு எதிராக மட்டும் பயன்படுத்தப்படுவதாக எலிசபெத்தின் வக்கீல் கூறினார்.