வங்கதேசத்தில் படகு விபத்து : 50 பேர் பலி!
Read Time:50 Second
வங்கதேசத்தில் மேக்னா ஆற்றில் 100க்கும் அதிகமான பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த இயந்திரப் படகு விபத்திற்குள்ளானதில் 50க்கும் அதிகமான பயணிகள் மூழ்கி உயிரிழந்திருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது! நீந்தி உயிர் தப்பிய பயணிகள் தவிர, சிறார்களும், பெண்களும் மூழ்கிவிட்டதாகவும், அவர்களைத் தேடும் பணி நடந்து வருவதாகவும் கூறியுள்ள வங்கதேச அதிகாரிகள், இதுவரை இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்த விபத்து வங்கதேச நேரப்படி இன்று காலை 9 மணிக்கு நிகழ்ந்துள்ளது.