கெக்கிராவையில் துப்பாக்கிச்சூடு.. இருவர் வைத்தியசாலையில் அனுமதி
Read Time:1 Minute, 19 Second
அநுராதபுரம் கெக்கிராவையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைநத் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியைச்சேர்ந்த பெண்ணொருவர் தனது மகளை பஸ்நிலையத்திற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மகளின் கழுத்திலுள்ள தங்கச்சங்கிலியை பறிக்க முற்பட்டுள்ளனர் இவர்கள் சத்தமிட ஆரம்பித்துள்ளதையடுத்து மகளின் கணவர் வெளியே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது இச்சம்பவத்தில் பெண்ணும் மகளின் கணவரான மருமகனும் படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் கெக்கிராவைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating