வாழைச்சேனை ஓட்டமாவடியில் இருந்து வங்காள விரிகுடா கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்களைக் காணவில்லை
Read Time:56 Second
மட்டக்களப்பு வாழைச்சேனை ஓட்டமாவடியில் இருந்து வங்காள விரிகுடா கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்களைக் காணவில்லை என்று அவர்களது உறவினர்கள் கல்குடா பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கடந்த பதினாலாம் திகதி இயந்திரப் படகில் ஆழ்கடல் மீன்பிடிக்கென சென்றிருந்த இவர்கள் ஐவரும் இதுவரையில் வீடு திரும்பவில்லையென்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனையைச் சேர்ந்த 27வயதான மோகன்ராஜ், 48வயதான ரவி, திருமலையைச் சேர்ந்த 24வயதான சுகி, 19வயதான டிலக்சன், 19வயதான தீபன் ஆகியோரே காணாமற் போயுள்ளனர்.
Average Rating