நேற்றும் இலங்கை அகதிகள் 48 பேர் தமிழகம் சென்றனர்
Read Time:1 Minute, 22 Second
திருகோணமலையிலிருந்து நேற்றும் படகுகள் மூலம் 48 தமிழர்கள் அகதிகளாக இராமேஸ்வரம் சென்றுள்ளனர். இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தொடரும் யுத்த சூழ்நிலையாலும், புலிகளின் அச்சுறுத்தலாலும் அண்மைக் காலங்களில் 2576 பேர் அகதிகளாக இந்தியாவிற்குச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் நேற்;றுக் காலையும் மூன்று படகுகளில் 48 பேர் அகதிகளாக இராமேஸ்வரம் சென்றுள்ளனர். இவர்கள் அனைவரும் பொலிசாரின் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் மண்டபம் அகதி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை பள்ளத்தோட்டம், பேசாலை கடற்கரைப் பகுதியிலிருந்து 5 குடும்பங்களைச் சேர்ந்த 10 ஆண்கள், 8 பெண்கள், 5 ஆண் குழந்தைகள், மற்றும் 3 பெண் குழந்தைகள் உட்பட 26 பேர் இரண்டு படகுகளில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல் முனை மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரைப் பகுதிகளை சென்றடைந்துள்ளனர்.