போலிதகவல்கள் வழங்கிய அரசசார்பற்ற அதிகாரிகள் நாடு கடத்தப்படவுள்ளனர்
Read Time:1 Minute, 8 Second
இலங்கைக்கு எதிராக போலியான தகவல்களை வழங்கிய அரசசார்பற்ற நிறுவன உயரதிகாரிகள் நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நொன் வயலன்ஸ் பீஸ் போஸ் எனப்படும் அரசசார்பற்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் தகவல்களை ஒளிபரப்புச் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறு போலியான தகவல்களை வெளியிம் குறித்த நிறுவனத்தில் உயரதிகாரிகள் இருவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் கோரியுள்ளது. குறித்த நபர்களின் விஸா விண்ணப்பங்களை நிராகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த இரண்டு நபர்களும் இலங்கைக்கு எதிரான வகையில் கடிதமொன்றை எழுதி ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
One thought on “போலிதகவல்கள் வழங்கிய அரசசார்பற்ற அதிகாரிகள் நாடு கடத்தப்படவுள்ளனர்”
Leave a Reply
You must be logged in to post a comment.
நீங்கள் கூறுவது மட்டுமே உண்மையான தகவல்..
.ஐயோ..ஐயோ.. சின்னப்பிள்ளைதனமாயிருக்கு….