விரைவில் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் -பாதுகாப்புச் செயலாளர்
Read Time:1 Minute, 20 Second
விரைவில் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அல்ஜஸீரா ஊடகத்திற்கு அளித்த விஷேட செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் அரசியல் சாசனத் திருத்தங்களை கொண்டு வருவது தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் காணப்படுவதனால் விரைவில் அரசியல் சாசனத் திருத்தம் ஏற்படுத்தப்படும் என அவர் குறிப்பி;ட்டுள்ளார். அரசியல் சாசனத் திருத்தத்தின் மூலம் கூடுதல் அதிகாரங்களை ஜனாதிபதி கோருவதாக வெளியிடப்படும் விமர்சனங்களில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதிக்கு சகல அதிகாரங்களும் காணப்படுவதாகவும் மேலதிக அதிகாரங்கள் எதுவும் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating