பிரபாகரனின் தாயாரை இந்தியா , கனடா நிராகரித்தால் இலங்கை வருவார் ?
Read Time:1 Minute, 11 Second
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயாரை இந்தியாவும் ,கனடாவும் நிராகரிக்கும் பட்சத்தில் மீண்டும் அவர் இலங்கைக்கு அழைத்துவரப்படுவார். இவ்வாறு தமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பின் செயலாளர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தற்போது மலேஷியாவில் தங்கியிருக்கும் பிரபாகரனின் தாயாரான பார்வதி அம்மாளின் விஸா எதிர்வரும் மே மாதம் 16ஆம் திகதி முடிவுக்கு வருகின்றது என்றும் சிவாஜிலிங்கம் மேலும் குறிப்பிட்டார். இரு நாடுகளும் பார்வதி அம்மாளின் விஸாவை நிராகரிக்கும் சூழ்நிலையில் தான் மலேஷியா சென்று,அவரை கொழும்புக்கு அழைத்து வந்து, அங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் கே.சிவாஜிலிங்கம் கூறினார்.
Average Rating