ஆசாமில் ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக போராடிய லக்ஷ்மி ஓரான் என்கிற பெண்ணை அம்மணமாக்கி….
“பார்பனனைவிட சாதி இந்துக்கள் கொடியவர்கள் என்று இந்தியா தொடர்ந்து நிருபித்து வருகிறது.. ஆசாமில் ஆதிவாசிகளின் உரிமைகளுக்காக போராடிய லக்ஷ்மி ஓரான் என்கிற பெண்ணை அம்மணமாக்கி அடித்து உதைத்து விரட்டி அடித்தனர் சாதி இந்துக்கள் ..!!”
“அடித்து உதைத்து” இது வெறும் வார்த்தை அல்ல “வலி” ..!!
“சாதி இந்துக்களால் அம்மணமாக்கி அவமானம் படுத்தப்பட்டு வீதி வீதியாக அடித்து விரட்டப்பட்டு மேல் சாதிக்காரர்களால் ஒருவர் விடாமல் உதைக்கப்பட்டு சாதி வெறிக்கு இரையான லக்ஷ்மி ஓரான் சொன்னது இது தான் …
“நான் மிகுந்த அவமானத்தில் இருக்கிறேன் இந்த அவமானத்தை என்னால் என் வாழ்கையின் எந்த காலகட்டத்திலும் மறக்கவே முடியாது … ஆதிவாசிகள் உரிமைகளை கேட்பது தவறா .. ?? மனிதர்களாக மதிக்கப்பட வேண்டும் என்று விரும்பாது தவறா .. ?? வீதியில் நாய்கள் நுழைந்தால் கூட ஒன்றும் செய்யாத மேல் சாதி . நாங்கள் நடந்ததும் எங்களை கேவலமாக அடித்து விரட்டுவது ஏன் ?? நாங்கள் நாய்களைவிட கேவலமானவர்களா ??”
“நான் தற்கொலை செய்து கொள்ள யோசிக்காத இரவே இல்லை… அனால் என்னை நம்பித்தான் என் குடும்பம் இருக்கிறது.. அந்த குடும்பம் எப்போதும் போல வறுமையில் தான் இருக்கிறது … அதை காபற்றத்தான் நான் அவமானத்தை மறந்து வருமானத்திற்க்காக இன்று செக்யுரிட்டி வேலை பார்கிறேன் ..!!”
Average Rating