சுயாதீன விசாரணைக்கு ஐ.தே.கட்சி தலைவர் ரணில் கோரிக்கை
Read Time:1 Minute, 21 Second
அடிப்படை வாதம் தொடர்பிலான முறைபாடுகள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகளை நடத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரியூள்ளார். இது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்தினார். பௌத்த அடிப்படைவாத குழுக்களினால் அண்மைக்காலமாக இலங்கையில் இன முறன்பாட்டை ஏற்படுத்தும் செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் பொலீசில் முறைபாடு தெரிவிக்குமாறு அரசாங்கம் கோரியிருந்தது. எனினும் அவ்வாறான முறைபாடுகள் தொடர்பில் பொலீசார் அவதானம் செலுத்துவதில்லை என ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியூள்ளார். இந்நிலையில் இது குறித்து சுயாதீமான விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கோரியூள்ளார்.
Average Rating