பள்ளிவாசல் வீதி புனரமைப்புக்கான நினைவூப் படிகம் உடைப்பு
கல்முனைக்குடி கடற்கரை பள்ளிவாசல் வீதி புனரமைப்புக்கான அங்குரார்ப்பண வைபத்தில் நடப்பட்ட அடிக்கல் நினைவூப் படிகம் மற்றும் திட்டமிடல் விவர விளம்பரப்பலகை என்பன நேற்று அதிகாலை உடைத்து வீழ்த்தப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் மாலை தேசிய காங்கிரஸ் மாகாணசபை உறுப்பினரான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தலைமையில் நடைபெற்ற குறித்த அங்குரார்ப்பண வைபத்தில் கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை பிரதம அதிதியாகவூம் மு.கா. மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல்இ கல்முனை மேயர் சிராஸ் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவூம் கலந்து கொண்டிருந்தனர். அதேவேளை இவ்வூரை சேர்ந்த மற்றொரு முக்கிய அரசியல்வாதி இவ்வைபவத்திற்கு அதிதியாக அழைக்கப்பட்டிருக்கவில்லை. அத்துடன் ஹரீஸ் எம்.பி.யின் புகைப்படமும் குறித்த விளம்பர பலகையில் காட்சிப்படுத்தப்படவில்லை. இந்நிலையிலேயே அடிக்கல் நினைவூப் படிகம் மற்றும் திட்டமிடல் விவர விளம்பரப் பலகை என்பன உடைக்கப்பட்டுள்ளன என்று விடயமறிந்த வட்டாரங்களின் தகவல்கள் கூறுகின்றன.
Average Rating