80 வயதான தாயைத் தாக்கிப் படுகொலை செய்த மகன்
Read Time:51 Second
தனது 80 வயதான தாயைத் தாக்கிப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் அவரது மகன் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அநுராதபுரம், கம்பிரிகஸ்வௌ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பொலிஸ் அவசரப் பிரிவு தொலைபேசி இலக்கமான 119 க்கு கிடைத்த அவசர அழைப்பு ஒன்றினையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் கொலையுண்ட நிலையில் கிடந்த சடலத்தை மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் அவரது மகனையும் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating