யாழில் தந்தை செல்வாவின் பிறந்ததினம்
Read Time:1 Minute, 9 Second
அமரர் தந்தை செல்வாவின் (செல்வநாயகத்தின்) 115 வது பிறந்த நாள் நிகழ்வுகள் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இன்றுகாலை 9 மணியளவில் தந்தை செல்வா சதுக்கத்தில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தந்தை செல்வின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தார். இவ் பிறந்த தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ சரவணபவன், சுமத்திரன் மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் புளொட் முக்கியஸ்தர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரேத சபை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Average Rating