பெண்களை சீண்டும் ஆண்களுக்கு அதிர்ச்சி வைத்தியம்
இந்திய பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் இணைந்து பெண்களை பாலியல் வல்லுறவிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் உள்ளாடையொன்றைத் தயாரித்துள்ளனர். இது வல்லுறவு புரிய முயல்பவர் மீது 3800 கிலோவோல்ட் மின்சாரத்தை பாய்ச்சி நிலைகுலையச் செய்யக்கூடியது. மார்புப் பகுதியில் கூடுதலான அழுத்தம் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் மின்சாரத்தை இது பாய்ச்சுகின்றது. சுமார் 82 தடவைகள் மின்சாரத்தைப் பாய்ச்சும் திறன் கொண்டது இவ் உள்ளாடை. எதிரியை நிலையகுலையச் செய்வது மட்டுமல்லாமல்.ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தின் மூலமாக சம்பவ இடம் தொடர்பான தகவலை பொலிஸ் மற்றும் குடும்ப உறுப்பினருக்கு தானாக குறுந்தகவலொன்றை அனுப்பி வைக்கும் வசதியையும் கொண்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த 3 மாணவர்களே இதனை உருவாக்கியுள்ளனர். பாலியல் வல்லுறவு மட்டுமன்றி பொது இடங்களில் பெண்களிடம் சேஷ்டை விட முயல்பவர்களுக்கு இதுவொரு சிறந்த தீர்வாக அமையுமென இதன் உருவாக்குனர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே புதுடில்லியில் அண்மையில் நடந்த வல்லுறவுச் சம்பவங்கள் மற்றும் தொடர் வல்லுறவுச் சம்வங்களையடுத்தே இந்நடவடிக்கைக்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
Average Rating