சாவகச்சேரி விபத்தில் தம்பதியர் காயம்
Read Time:1 Minute, 17 Second
யாழ். சாவகச்சேரிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தம்பதியர் காயமடைந்ததுடன் அவர்களின் குழந்தையும் தூக்கி வீசப்பட்ட நிலையில்காயமின்றித் தப்பியுள்ளது. ஏ9 பிரதான வீதியில் சாவகச்சேரி பெரிய அரசடிப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. தம்பதியர் சென்ற மோட்டார் சைக்கிளும் எதிரே வந்த கூலர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்டுள்ளன. இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த மிருசுவிலைச் சேர்ந்த விக்ரர் ஜெயக்குமார் (வயது34), அவரது மனைவி ஜெயக்குமார் ஸ்ரீதயாளினி (வயது32) ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர். இதன்போது இவர்களின் ஒரு வயதுக் குழந்தை தூக்கி வீசப்பட்டு காயமின்றி தப்பியுள்ளது. தம்பதியர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Average Rating